மயிலாடுதுறை திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் திருக்கல்யாண வைபவம் : பக்தர்கள் சீர்வரிசையை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர்
Mar 11 2023 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான் அருள்பாலித்து வருகின்றனர். காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் இக்கோயில் முதன்மையான தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் கடந்த வாரம் இந்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.