திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 21, 22ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து - ஆழ்வார் திருமஞ்சனம், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு
Mar 13 2023 8:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும் வரும் 21-ம் தேதியும், மறுநாள் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டியும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. தெலுங்கு வருடபிறப்பன்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி-பூதேவியுடன் மலையப்ப சுவாமி, விஷ்வ சேனாதிபதிக்கு சிறப்பு பிரசாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் காலை 7 மணி முதல் 9 மணி வரை கோயிலுக்குள் உற்சவ மூர்த்திகள் வலம் வந்து மூலவருக்கும், உற்சவருக்கும் புது வஸ்திரம் அணிவிக்கப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.