சென்னை தியாகராயநகர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேக விழா - திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் தகவல்
Mar 17 2023 8:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தியாகராயநகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சென்னை தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு புதியதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் பொதுமக்கள் காலை 11:00 மணிக்கு மேல் வந்தால் போதுமானதாக இருக்கும் எனவும், மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயத்திற்கு வரும் அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ஆலயத்திற்கு வரும் பொது மக்களுக்கு 15 ஆயிரம் லட்டுகள் இலவசமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.