சென்னை தியாகராயநகர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆலய மகா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
Mar 17 2023 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தியாகராயநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில், நடிகை காஞ்சனா காணிக்கையாக வழங்கிய 6 கிரவுண்ட் நிலத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 10 கோடி ரூபாய் செலவில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டது. இந்நிலையில், சம்ப்ரோக்ஷண நாளான இன்று சிறப்பு அர்ச்சனைகளும் ஆராதனைகளும் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.