மயிலாடுதுறை ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் : 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
Mar 17 2023 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வானதி ராஜபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா, கடந்த 15ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மகா சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.