காமாட்சியம்மன் கோவில் கலசத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்கள்
Mar 19 2023 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தின்னபெல்லூர் காமாட்சியம்மன் கோவில் கலசத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் 12 வகையான மலர்கள் தூவப்பட்டன. தருமபுரி மாவட்டம் தின்னபெல்லூர் கிராமத்தில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மறு கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில், 48 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் மற்றும் ஏராளமான பெண்கள் பால் குடத்தை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கிராமத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு கோவில் விமான கலசத்திற்கு 12 வகையான மலர்கள் தூவப்பட்டன.