பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் சிவபெருமானுக்கும், ஸ்ரீநந்தி பகவானுக்கும் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயத்தில் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலில் சூரிய பெருமானுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனாதி திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், கரும்புசாறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை அருகே உள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி ஸமேத காச்யப்பேஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கு பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் பகுதியில் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் பங்குனி மாத சனி பிரதோஷ வழிபாடு விழா சிறப்பாக நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், போன்ற வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் தின்னபெல்லூர் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக மண்டல சிறப்பு பூஜைக்கு ஹெலிகாப்டர் மூலம் கோயில் கோபுரத்தின் மீது 12 வகையான மலர்கள் தூவபட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளி உள்ள சிவன் கோவிலில் பங்குனி பிரதோஷம் விமர்சியாக கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் தென்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கா செளந்திரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் மற்றும் அஷ்டமி காலபைரவர் பூஜை நடைபெற்றது.
கரூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள ஸ்ரீ செளந்தரநாயகி, ஸ்ரீ அலங்காரவள்ளி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.