திருப்பதி திருமலை தேவஸ்தான கோவிலில் உகாதி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சுவாமி தரிசனம்
Mar 22 2023 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உகாதி பண்டிகையையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கலியுகம் தொடங்கிய நாளாக கருதப்படும் உகாதி பண்டிகையை ஆந்திரா, கர்நாகடத்திலும், தமிழ்நாட்டில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தரிசனம் செய்தனர்.