பங்குனி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஏராளமான பக்தர்கள் வருகை - பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
Mar 26 2023 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி கிருத்திகையையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், விடுமுறை தினமான இன்று பங்குனி கிருத்திகை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனை தொடர்ந்து, கடலில் புனித நீராடி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.