வந்தவாசி அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டிய பள்ளத்தில் பழமையான மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுப்பு - அபிஷேக ஆராதனைகள் செய்து கிராமமக்கள் வழிபாடு
Mar 27 2023 8:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலை விரிவாக்க பணியின் போது பழமையான மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன. அப்போது சாலை போடுவதற்தாக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேலும் அந்த சிவலிங்கத்தில் பழமையான சில குறியீடுகளும் உள்ளன. இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.