தமிழகம் முழுவதும் கோலாகலமாக தொடங்கிய பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம்
Mar 27 2023 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் பங்குனி மாதத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பகதர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பெருமாளை வழிபாடு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மதனகிரி முனேஷ்வரசுவாமி கோயிலில் தேர் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனை காட்டினர்.
ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் விழா கோலாகலமாக நடைப்பெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.