கரூர் புகழிமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம்
Mar 27 2023 2:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புகழிமலை முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி, ஆலயம் அருகே யாக குண்டங்கள் அமைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், கோபுர கலசத்திற்கு சந்தன பொட்டிட்டு, வண்ண மாலைகள் அணிவித்து தீபம் காண்பிக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள்மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.