திருவண்ணாமலை வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் புதிய தேரின் வெள்ளோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்
Mar 27 2023 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோயிலில், புதிய தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் ரங்கநாதர் பெருமாள் கோயிலில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தேரோட்டம் நடைபெற்றபோது, ஒரு தேர் முற்றிலும் பழுதடைந்து உடைந்துவிட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேர் செய்யும் பணி தொடங்கியது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுடன், தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.