தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Mar 27 2023 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில், மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சியில் உள்ள செல்வ முருகன் கோயிலில், 10 வருடங்களுக்குபின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயிலில், கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னதாக 44 குண்டங்களுடன் யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வடகாட்டுபட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட மகா மாரியம்மன் கோயிலிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஆத்ம லிங்கேஷ்வர், விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் நடத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வேம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலிலும், மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் சின்னபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐய்யனாரப்பன் திருக்கோயிலில், திருக்குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், தரிசனத்திற்காக வந்த பக்தர்களுக்கு, சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதை அம்மன் ஆலயத்தில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.