கோடை விடுமுறையையொட்டி திருப்பதியில் குவியும் பக்தர்கள் : வி.ஐ.பி. சிபாரிசு கடித தரிசனங்களை ரத்து செய்த தேவஸ்தானம்
May 20 2023 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. சிபாரிசு கடித தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர். தற்போது விஐபி தரிசனம் ரத்து செய்திருப்பதால் 36 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் 18 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். தரிசன நேரம் பாதியாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.