தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்

May 23 2023 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதேபோல் காரைக்கால் பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சௌடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, மாதரை கிராமத்திலிருந்து கரகம் எடுத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சௌடாம்பிகை கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது, வாளால் தங்கள் உடலை வெட்டிக் கொண்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகிஷ சம்ஹார நினைவுப் பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் காரைக்கால் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00