சேலம் வாழப்பாடி அருகேயுள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயிலில் பூமிதி திருவிழா - 500-க்கும் மேற்பட்டோர் தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன்
May 24 2023 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயிலில் நேற்று அர்ஜுனனுக்கு தவசு மரம் ஏறுதல், உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை தீபாரணை நடைபெற்றது. பின்னர் பூமிதி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக திரெளபதி அம்மனுக்கு பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் பிரம்மாண்டமான தீக்குண்டத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் வாழப்பாடி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.