திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் : பக்தர்களின் காலணிகளை சாலையில் வீசி கோவில் ஊழியர்கள் அட்டூழியம்
May 29 2023 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்களின் காலணிகளை கோவில் நிர்வாகம் தெருவில் வீசிய அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் முருகப்பெருமானை காண குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக காலணிகள் வைக்கும் இடம் இருந்தும் அதை நிர்வாகம் சரியாக பராமரிக்காததால் பக்தர்கள் தங்கள் காலணிகளை கோயில் சுற்றுப்புற கடைகளில் விட்டு செல்கின்றனர். அந்த காலணிகளை கோவில் ஊழியர்கள் நடுரோட்டில் தூக்கி வீசி உள்ளனர். இந்த செயல் வேதனை அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.