சென்னை வடபழனி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
May 30 2023 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றியுள்ள மேற்கு மாட வீதி, வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மாட வீதி, தெற்கு பெருமாள் கோவில் தெரு, ஆற்காடு சாலை, நூறடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.