கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழாவில் இளைஞர்களிடையே மோதல் : ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரல்
Jun 2 2023 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழாவில் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் விடுதல் நிகழ்ச்சியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், அமராவதி ஆற்றுப்பகுதியில் இருதரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கட்டை, சேர் உள்ளிட்டவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.