சிவகங்கை முறையூர் அருகே சொக்கநாதருக்கும் அன்னை மீனாட்சிக்கும் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
Nov 17 2023 2:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் பிரியா விடை உடனான சொக்கநாதருக்கும் அன்னை மீனாட்சிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக வண்ண மலர்கள் மற்றும் பொன் நகைகளால் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சங்கல்பம், மாங்கல்ய பூஜை நிறைவு பெற்று வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க பிரியாவிடை தாயாருக்கும், அன்னை மீனாட்சிக்கும் மாங்கல்யங்களை வேத விற்பனர்கள் அணிவித்தனர். பின்னர் மஞ்சள் கயிற்றை பக்தர்கள் பிரசாதமாக பெற்றுச் சென்றனர்.