நாகூர் தர்காவின் 460-வது கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Mar 10 2017 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 460-வது கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகூர் தர்காவின் 460-வது கந்தூரி விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசுதல் விழாவையொட்டி மலர்கள் மற்றும் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சந்தனக்கூடு நாகூரை வந்தடைந்த பின்னர் சிறப்பு துவா ஓதப்பட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்காக, 40 கிலோ சந்தனக்கட்டைகளை வழங்க உத்தரவிட்ட, மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு இஸ்லாமியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.