தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
Mar 13 2017 7:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மாசிமக திருவிழாவில், பால்குடம் சுமந்தும், வேல் காவடி எடுத்தும், தீ மிதித்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பழமலை நாதர் ஆலயத்தில், மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தெப்ப திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. தீபாராதனை மற்றும் வானவேடிக்கையுடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ அலர்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனவாச பெருமாள் திருகல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.