திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பங்குனி பெருவிழா கொடியேற்றதுடன் தொடக்கம்
Mar 14 2017 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பங்குனி பெருவிழா கொடியேற்றதுடன் இன்று வெகு விமரிசையாக தொடங்கியது.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராக சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றதுடன் சிறப்பாக தொடங்கியது. முன்னதாக உற்சவ கொடிக்கு சிறப்பு பூஜைகளும், கொடி மரத்தின் பீடத்தில் வீற்றிருக்கும் விநாயகர், சுப்ரமணியர், சந்திரகேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டமும், தெப்ப உற்சவமும் மே மற்றும் ஜீன் மாதங்களில் நடைபெற உள்ளது.
இதனிடையே, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் நிறைவான இன்று, பந்தம்பறி உற்சவ மற்றும் 18 திருநடனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலின் முன்பு எழுந்தருளிய தியாகராஜ சுவாமி, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.