மழை பெய்ய வேண்டி ஆண்களும், பெண்களும் கும்மியடித்து நேர்த்திக்கடன் செலுத்திய விநோத வழியாடு முதுகுளத்தூர் அருகே நடைபெற்றது

Mar 17 2017 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

மழை பெய்ய வேண்டி, ஆண்களும், பெண்களும் கும்மியடித்து நேர்த்திக்கடன் செலுத்திய விநோத வழியாடு முதுகுளத்தூர் அருகே நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பொழிய வேண்டி, பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த ஆப்பனூரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு, மழை வளம் மற்றும் மதநல்லிணக்கம் வேண்டி பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். இதற்காக கோயில் முன்புரத்தில் ஊர்கூடி கும்மிகொட்டி விழாவை கொண்டாடினர். இதில், ஆப்பனூர் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், மழை பொழிய வேண்டி, நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் உள்ள பழைமைவாய்ந்த நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு யாகத்துடன் வருண ஜெபமும் நடைபெற்றது. இதனையொட்டி, ஆலயத்தில் உள்ள கிணற்றில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தென்காசி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00