மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
Mar 17 2017 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது. முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருள, திருத்தேர் கோயில் வாசலிலிருந்து புறப்பட்டு, யானை ஊர்வலமாக முன்னே செல்ல, மலைப் பாதையினை சுற்றி வந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. திருத்தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழிநெடுகிலும், பிரசாதங்கள் மற்றும் நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.