புதுக்கோட்டையில் பெரியகுரும்பப்பட்டி கோயில் திருவிழா : ஜல்லிக்கட்டுப் போட்டியில் 480 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன
Mar 19 2017 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்பப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 480 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்துள்ள பெரியகுரும்பப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில், தஞ்சை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 480-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இக்காளைகளை 320 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி அடக்கிய காட்சி பார்வையாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், கட்டில், பீரோ, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.