சென்னையை அடுத்த திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயிலின் பங்குனி தேரோட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
Mar 22 2017 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த திருநீர்மலை பகுதியில் பிரசித்தி பெற்ற நீர்வண்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி உற்சவ விழா கடந்த சில நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. நிகழ்ச்சியின் ஏழாம் நாளான இன்று, திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய நீர்வண்ண பெருமாளள் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனிடையே, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜெம்புகேஸ்வரர் கோயிலில், கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, அதற்கான பாலாலய பணிகள் நிறைவு பெற்றன. இதனையடுத்து ராஜகோபுரம், கார்த்திகை கோபுரம், மல்லவன் கோபுரங்களில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தல்கால் நடப்பட்டது.