கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா கொடியேற்றதுடன் வெகு சிறப்பாக தொடங்கியது
Mar 23 2017 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தூக்க நேர்ச்சை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தூக்க நேர்ச்சை விழா, வருகிற 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முத்துக்குடை ஊர்வலம், சிங்காரி மேளம் முழங்கஅலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், கோயில் தந்திரிகள் கொடியேற்றம் செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.