அட்சய திருதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கம், வெள்ளி டாலர்கள் விற்பனை - ஆலய தேவஸ்தானம் அறிவிப்பு
Apr 19 2017 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அட்சய திருதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கம், வெள்ளி, தாமிர டாலர்கள் விற்பனை செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அட்சய திருதியை தினத்தின் போது தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவதால் வீட்டில் செல்வம் சேரும் என பொதுமக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
இந்த ஆண்டு அட்சயதிரிதியை வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தங்கம், வெள்ளி, தாமிர டாலர்கள் விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, டாலரின் ஒரு பக்கத்தில் ஏழுமலையான் உருவமும், மற்றொரு பக்கத்தில் பத்மாவதி தாயார் உருவமும் பொறிக்கப்பட்டு ஆந்திரா வங்கி மூலமாக பக்தர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.