நெல்லை வரதராஜப்பெருமாள் கோயில் சித்திரைத் திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்
Apr 19 2017 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோயிலில், சித்திரைத் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. திருத்தேரில் பெருமாள் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். புஷ்ப பல்லக்கில் பெருமாள் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.