திருச்சி ஸ்ரீ் ரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Apr 21 2017 7:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீ்ரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று நம்பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நான்கு மாட வீதிகளில் உலா வந்த சுவாமி, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நெல்லை வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சுவாமிக்கு நாள்தோறும் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா சென்ற பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரெங்கநாதர் கோயில் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் - தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் நடுவூர் குப்பம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மகிமை மாதா தேவாலயத்தின் 502-வது ஆண்டுவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிருஸ்துவ மக்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி வருகிற 29-ம் தேதி நடைபெறவுள்ளது.