ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா : ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க ஸ்படிகம், ஆரத்தி தட்டு
Apr 23 2017 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஸ்படிகம், ஆரத்தி தட்டு ஆகியவை வழங்கப்பட்டன.
வைணவ சமயத்தை தோற்றுவித்த ஸ்ரீ்ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ்பெரும்புதூரில் இன்று துவங்கியது. இதனையொட்டி ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்படிகம் மற்றும் ஆரத்தி தட்டு ஆகியவை இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு. சிவசண்முகமணியிடம் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து ஸ்ரீ்ராமானுஜர் பற்றிய குறுந்தகடும் வெளியிடப்பட்டது.
இதனிடையே, பெருமாள் கோயிலின் பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவடைவதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் வீதி உலா சென்ற பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முச்சந்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.