கடலூரில் திட்டக்குடி அருகே விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபாடு : விவசாயிகள் நல் ஏர் பூட்டி விவசாய பணிகள் தொடக்கம்
Apr 24 2017 7:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபாடு மேற்கொண்ட விவசாயிகள் நல் ஏர் பூட்டி, விவசாய பணிகளை தொடங்கினர்.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சித்திரை மாதம் 10ம் நாள் பூமாதேவியையும், சூரியநாராயணனையும் வழிபட்டு ஆண்டு தோறும் நல் ஏர் பூட்டி கிராமங்களில் விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம். அதன்படி, கடலூர் மாவட்டம்,திட்டக்குடியை அடுத்துள்ள ம.புடையூரில் நல் ஏர் கட்டும் திருவிழா நடைபெற்றது. விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபட்ட விவசாயிகள். பின்னர் தங்கள் நிலத்தில் ஏர்களை ஓட்டி தானியங்களை தெளித்தனர்.
நாகை மாவட்டம், திருநன்றியூரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தீ மிதி விழாவையொட்டி, நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், மாலையில் நடைபெற்ற தீ மிதி விழாவில் வேண்டுதல் மேற்கொண்ட பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ுடோர் தீக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், பூரட்டாதி நடசத்திரத்தையொட்டி, குபேரபெருமானுக்கு யாகவேள்வியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் அருள்மிகு சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவத்திருத்தலங்களில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில்இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பரிவட்டம், மற்றும் கிளி ஆகியவை, ஸ்ரீரங்கத்தில் சித்திரை ரேவதி நட்சத்திர தினத்தன்று நடைபெறும் திருத்தேரோட்டத்தில் ஸ்ரீரெங்கநாதருக்கு சூட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்டது.