ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரைத் திருவிழா : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து அரங்கநாதர்சுவாமிக்கும், நம்பெருமாளுக்கும், தாயார்களுக்கும் பட்டு வஸ்திரங்கள்
Apr 24 2017 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து அரங்கநாதர்சுவாமிக்கும், நம்பெருமாளுக்கும்,தாயார்களுக்கும் பட்டு வஸ்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, வழக்கம் போல இந்த ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து ரெங்கநாதர் சுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்களும், தாயார்களுக்கு பட்டுப் புடவைகளும் எடுத்து வரப்பட்டன. இவற்றை, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மற்றும் ஆலய அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். முன்னதாக, ஆண்டாள் கோயில் வஸ்திர மரியாதை ஊர்வலம், ரங்கவிலாச மண்டபத்திலிருந்து புறப்பட்டு உத்திர வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. நாளை நடைபெறும் திருத்தேரோட்டத்தின்போது, இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.