சீர்காழி அருகே அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று நேர்த்திக்கடன்
Apr 25 2017 7:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வைத்தீஸ்வரன்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் இரண்டாவது செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடு நடத்த சிவகங்கை, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக, சீர்வரிசையுடன் வந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வழிநடைக்கு துணையாக கொண்டு வந்த கம்புகளை கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். மேலும், அங்கிருந்து வேறொரு குச்சியை வழிபாட்டுக்காக கொண்டு சென்றனர்.