மிகவும் பழமை வாய்ந்த சேலம் மாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
Apr 26 2017 2:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மிகவும் பழமை வாய்ந்த சேலம் மாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மாரமங்கலத்தில் மிகவும் பழமைவாய்ந்த மாரீஸ்வரர் மற்றும் திருகோவில்கள் கட்டி முடிக்கப்பட்டதையொட்டி மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக இன்று காலை 108 மூலிகை பொருட்களை வைத்து யாக பூஜைகள் நடத்தி புனிதநீர் கோபுரகலசத்தின் மேல் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவன் அருளை பெற்றனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.