கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் ஜெயந்தி விழா : திருவாரூரில் பிறந்த வீட்டில் சங்கீத இசை நிகழ்ச்சி
Apr 27 2017 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் ஜெயந்தி விழாவை யொட்டி, திருவாரூரில் அவர் பிறந்த வீட்டில் சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஆகிய மூவரும், கி.பி. 17-ம் நூற்றாண்டில், திருவாரூரில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்தனர். இவர்களில் 3-வதாக அவதரித்த ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் 242-வது ஜெயந்தி விழா, திருவாரூரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 35 நாட்களுக்கு தொடர் சங்கீத இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் 27-ம் நாள் இசை விழாவில், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த டாக்டர் கிரிஜா ஹரிஹரன் குழுவினரின் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் இயற்றிய நவாவர்ண கீர்த்தனை உள்ளிட்ட பல்வேறு கீர்த்தனைகள் பாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இசை ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.