பெரம்பலூரில் வெங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உதிரசோறு வாங்கியும், முரத்தால் அடி வாங்கியும் விநோதமாக நேர்த்திக்கடன்

Apr 27 2017 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, உதிரசோறு வாங்கியும், முரத்தால் அடி வாங்கியும் விநோதமாக நேர்த்திக்கடன் செலுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தோடு அங்காள பரமேஸ்வரி காட்சி அளித்தார். பின்னர் காளி வேடமணிந்தவர் மயானத்திலிருந்து மருளுடன் ஊர்வலமாக வந்தார். மயான கொள்ளையின் முக்கிய நிகழ்வான உதிரச்சோறு தெளிக்கப்பட்டபோது, ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் கையேந்தி பெற்றனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக முரத்தால் அடி வாங்கினர்.

நாமக்கல் மாவட்டம் பட்டணம் கிராமத்தில் உள்ள பள்ளத்து கருப்பணார் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இரவு மட்டுமே நடைபெறும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கிடா வெட்டி பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததால், அக்கிராமமே ஜொலித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00