ஸ்ரீ்ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி கும்பகோணத்தில் உள்ள ராமானுஜர் கோயிலில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடு : யானை வாகனத்தில் எழுந்தருளிய ராமானுஜர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Apr 28 2017 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீ்ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி கும்பகோணத்தில் உள்ள ராமானுஜர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
வைணவ ஆச்சாரியரான ஸ்ரீ்ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ்ராமானுஜர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து யானை வாகனத்தில் எழுந்தருளிய ராமானுஜர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல், சக்கரபாணி கோயிலில் உள்ள ஸ்ரீ்ராமானுஜரின் சன்னதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதுடன், படிச்சட்டத்தில் வீதியுலாவும் நடைபெற்றது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரெங்கநாதர் கோயிலில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவின் நான்காம் நாளான நேற்று, ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் நடைபெற்று வரும் சித்திர திருவிழாவையொட்டி, ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்பாள், திருவீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திர திருவிழா இன்று காலை கொடியேற்றதுடன் வெகு சிறப்பாக தொடங்கவுள்ளது. அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 7-ம் தேதியும், திருத்தேரோட்டம் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.