திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது
Apr 28 2017 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மையப் பகுதியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்தின் முன்பு யாக பூஜை, கலச பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடி, சிவ வாத்தியங்கள் முழங்க ஏற்றப்பட்டது. இதில் ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டனர். சித்திரை திருவிழா வரும் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.