கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசியாமாசாஸ்திரிகளின் 255-வது ஜெயந்தி விழா : திருவாரூரில் சிறப்பு பூஜை மற்றும் இசை அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது
Apr 28 2017 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீசியாமாசாஸ்திரிகளின் 255-வது ஜெயந்தி விழா திருவாரூரில் உள்ள அவரது பிறந்த இல்லத்தில் சிறப்பு பூஜை மற்றும் இசை அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் முதலாவதாக அவதரித்த ஸ்ரீசியாமாசாஸ்திரிகள் திருவாரூர் மேட்டுத் தெருவில் உள்ள இல்லத்தில் 1762-ஆம் ஆண்டு சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் கொண்டு எண்ணற்ற கீர்த்தனைகளை பாடியுள்ளார். அவரது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீசியாமாசாஸ்திரிகள் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அதனைத்தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. அவர் இயற்றிய கீர்த்தனைகளை சங்கீத இசைக் கலைஞர்கள் அவர் பிறந்த இடத்தில் அமர்ந்து பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இசை அஞ்சலியைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு நெல் விதைதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.