உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - திரளான பக்தர்கள் பங்கேற்பு
Apr 28 2017 2:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு விமரிசையாக நடைபெற்றது. முன்னாக, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திண்டுக்கல் மையப் பகுதியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்தின் முன்பு யாக பூஜை, கலச பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடி, சிவ வாத்தியங்கள் முழங்க ஏற்றப்பட்டது. சித்திரை திருவிழா வரும் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காட்டில் அமைந்துள்ள எல்லையம்மன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.