மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவால் சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்ட ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
Apr 28 2017 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவால் சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்ட ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு, கோடைக்காலத்தையொட்டி, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
அரியாலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் மேரி மாதாவுக்கு தேவாலயம் ஒன்றைக்கட்டிய வீரமாமுனிவர், அந்த ஆலயத்திற்கு அடைக்கல அன்னை என்று பெயர் சூட்டினர். அரியலூரை ஆண்ட அரங்க மழவராய நைனார் என்ற மன்னர், தீராதநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது அடைக்கல அன்னையை வேண்டி குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆலயத்தின் மகத்துவத்தை அறிந்து ஏராளமானோர் தற்போதும் அங்கு வந்து வழிபடுகின்றனர். இத்தகு சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தை மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா சுற்றுலா ஸ்தலமாக அறிவித்து பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தினார். இந்த ஆலயத்திற்கு, கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இந்த ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னையின் புகழை மேலும் பரப்பும் வகையில், ஆசியாவிலேயே மிக உயரமான 120 அடி ஜெபமாலை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 53 அடி உயர வெண்கத்திலான அடைக்கலமாதா திருவுருவ சொரூபமும் அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இப்பணி நிறைவு பெற்றால் ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த ஆலயமாக இந்த ஆலயம் திகழும். இதன் மூலம் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதாவின் புகழ் மட்டுமின்றி வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டும் உலகறியும் என்பது திண்ணம்.