தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Apr 29 2017 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கல் நடும் விழாவுடன் சிறப்பாக தொடங்கியது. சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் 16 அடி உயர அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் அம்மனை வழிபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் திரெளபதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் ஒரு லட்சத்து எட்டு சிவலிங்கம் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.