கோடை விடுமுறையொட்டி திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
Apr 29 2017 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோடை காலத்தையொட்டி பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து திருமலை - தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தங்களது பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, திருமலையில் கூடுதலாக பொருட்கள் வைப்பறைகளை ஏற்படுத்தி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.