கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசைத் திருவிழா திருவாரூரில் தொடங்கியது : பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்பு
Apr 29 2017 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசைத் திருவிழா திருவாரூரில் தொடங்கியது. இதில் பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீமுத்துசுவாமி தீட்சதர் ஆகியோரின் ஜெயந்தி இசை திருவிழா, திருவாரூரில் நேற்று தொடங்கியது. தியாகராஜ சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சங்கீத இசை அரங்கில், வரும் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகளில் பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மும்மூர்த்திகள் இயற்றிய கீர்த்தனைகள் மற்றும் இசைக்கருவிகள் மூலம் இசையஞ்சலி செலுத்துகின்றனர். வரும் 3-ம் தேதி, ஸ்ரீதியாகராஜரின் 250-வது ஜெயந்தியையொட்டி நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கேற்று, பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைக்கவுள்ளனர்.