தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி கும்பகோணத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்
Apr 29 2017 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள் இணைந்து தனியார் பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர். அப்போது, மழைபொழிந்து வறட்சி நீங்கிடவும், கொளுத்தும் வெப்பம் தணிந்திடவும், நிலத்தடி நீர் பெருகிட வேண்டியும் மனமுருக பிரார்த்தனை செய்தனர். இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.