கோபியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராகு - கேது பரிகார தலத்தில் புனரமைப்புப் பணிகளை செய்து தந்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
Apr 29 2017 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தங்கமேடு பகுதியில் தம்பி கலை அய்யன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் பிரசித்தி பெற்ற ராகு, கேது பரிகார தலமாக கருதப்படுவதால் இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் ஆட்சியில் கோவில் திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி இக்கோவிலுக்கும், நிதி ஒதுக்கப்பட்டு, சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் முன்புறம் சிற்பங்களும், பக்தர்கள் வசதிக்காக கொட்டகைகளும், குடிநீர், சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலை புனரமைத்துள்ள தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.