நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட விழா கொடியேற்றதுடன் வெகு சிறப்பாக தொடங்கியது
Jun 11 2017 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட விழா இன்று கொடியேற்றதுடன் வெகு சிறப்பாக தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் நெல்லை நெல்லையப்பர் - காந்திமதியம்பாள் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்தேரோட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றதுடன் வெகு சிறப்பாக தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பின் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனையடுத்து நாள்தோறும் பல்வேறு சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. அதனைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதேபோல், தூத்துக்குடி திருஞான சம்பந்தமூர்த்தி மடாலயத்தில் உள்ள கன்னிவிநாயகர் மற்றும் திருஞானசம்பந்தமூர்த்தி ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.